சங்கரன்கோவில், நவ. 25 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி சார்பில் எஸ் ஐ ஆர் விழிப்புணர்வு மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை கொண்டாடுவது, வரும் 2026 தேர்தலில் மீண்டும் திமுகவை வெற்றி பெற உழைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா முன்னிலை வகித்து எஸ் ஐ ஆர் பணிகளில் கழக வக்கில்கள் அந்தந்த வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர்கள், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: தற்போது தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கழக வக்கீல்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் இணைந்து அனைவருக்கும் விண்ணபம் கிடைக்க பட்டுள்ளதா எனவும், அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்ய பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
மேலும் இந்த முகாம் முடிய 10 நாட்கள் மட்டும் உள்ளதால் இந்த கால அவகாசத்தில் இந்த பணிகளை கவனமுடன் செய்து முடிக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமில் ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள் மற்றும் பாக முகவர்களுடன் கழக வக்கீல் அணியினர் இணைந்து படிவங்கள் சரியாக நிரப்பபட்டு உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வக்கீல் அணியினர் அதை சரி செய்ய வேண்டும்.
வரும் நவ 27 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புளியங்குடி சிறப்பு குழந்தைகள் பள்ளியில் உணவு வழங்க வேண்டும். சங்கரன்கோவில், சிவகிரி நீதிமன்றங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். மேலும் வரும் 2026 தேர்தலில் மீண்டும் திமுகவை வெற்றி பெற வைக்க வக்கீல் அணியினர் களப்பணிகளை துவக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, மாவட்ட வக்கீல் அணி துணைத் தலைவர் முத்து வேலன், துணை அமைப்பாளர்கள் காந்தி நகர் ஜெயக்குமார், காளிராஜ், பிரபாகரன், வக்கீல்கள் அன்புச்செல்வன், ஜெயக்குமார் பாக்கியராஜ், அருள்துரை, பேட்ரிக் பாபு, விக்னேஷ், சின்னத்துரை, அய்யனார், ராஜ், காளிதாஸ், நேரு, சண்முகையா, முனியசாமி முத்துவைரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



